;
Athirady Tamil News

இழப்பீடு வழங்கப்படும் !!

0

மழையினால் சேதமடைந்த வயல்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக பெய்து வரும் கடும் மழை காரணமாக அம்பாந்தோட்டை மாவட்டத்தில் நூற்றுக்கணக்கான ஏக்கர் நெற்செய்கை அறுவடையை நெருங்கிய நிலையில் நாசமாகியுள்ளது.

விவசாய அமைச்சின் கூற்றுப்படி, வெற்றிகரமாக பயிரிடப்பட்ட இந்த நெற்பயிர்கள் தற்போது வெள்ளம் காரணமாக பாரியளவில் சேதமடைந்துள்ளன.

விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தங்காலை நெடோல்பிட்டிய உள்ளிட்ட பல பிரதேசங்களுக்கு மழையினால் சேதமடைந்த வயல்களை பார்வையிடச் சென்றார்.

வறட்சி மற்றும் மழையினால் சேதமடைந்த வயல்களுக்கு இழப்பீடு வழங்கும் பணிகளை ஆரம்பிக்குமாறு விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபைக்கு பணிப்புரை விடுத்ததாக விவசாய அமைச்சர் தெரிவித்தார்.

விவசாயிகளுக்கு அநீதி இழைக்க இடமளிக்கப்பட மாட்டாது எனவும், பயிர்களுக்கு ஏற்பட்டுள்ள சேதத்தை உரிய முறையில் மதிப்பீடு செய்து இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.