;
Athirady Tamil News

உலக சுற்றுலா தினத்தினை முன்னிட்டு வடமாகாண உள்ளூர் உற்பத்தியாளர்களின் உற்பத்திகளை சந்தைப்படுத்தும் சுற்றுலாக் கண்காட்சி!! (PHOTOS)

0

வடமாகாண சுற்றுலாப் பயணியகம், தொழிற்துறை திணைக்களத்தின் எற்பாட்டில் உலக சுற்றுலா தினத்தினை முன்னிட்டு வடமாகாண உள்ளூர் உற்பத்தியாளர்களின் உற்பத்திகளை சந்தைப்படுத்தும் சுற்றுலாக் கண்காட்சி இன்று(29) காலை 9.00 மணி முதல் யாழ்ப்பாணம் மத்திய கலாச்சார மையத்தில் வடமாகாண சுற்றுலாப் பணியகத்தின் தலைவர் அ.பத்திநாதன் தலைமையில் நடைபெற்றது.

இவ் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் அ.சிவபாலசுந்தரன் கலந்துகொண்டு கண்காட்சி கூடங்களை அங்குராப்பணம் செய்துவைத்தார்.
இதைவிட இந் நிகழ்வில் வடமாகாண தொழிற்துறை திணைக்களத்தின் பணிப்பாளர் வனஜா செல்வரட்ணமும் கலந்துகொண்டார்.

இதில் 18 உணவுசார்ந்த பொருட்களுக்கும் ; 25 கைவினை சார்ந்த உற்பத்தி பொருட்களுமான கண்காட்சிகூடாரங்கள் உள்ளடங்கலாக 43 உள்ளூர் உற்பத்தியாளர்களின் உற்பத்திப் பொருட்களுக்கான கண்காட்சிக்கூடாரங்கள் அமைக்கப்பட்டிருந்தது. இவற்றுடன் மாலை நேரத்தில் எமது கலை கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் நிகழ்வுகளும் இடம்பெற்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.