;
Athirady Tamil News

சரவணை மங்கையற்கரசி அவர்களின் நினைவை முன்னிட்டு, மட்டக்களப்பு “சக்தி இல்லத்தில்” விசேட உணவு வழங்கல்.. (படங்கள், வீடியோ)

0

சரவணை மங்கையற்கரசி அவர்களின் நினைவை முன்னிட்டு, மட்டக்களப்பு “சக்தி இல்லத்தில்” விசேட உணவு வழங்கல்.. (படங்கள், வீடியோ)

சரவணையில் பிறந்து லண்டனில் அமரத்துவமடைந்த திருமதி.. சண்முகநாதன் மங்கையர்க்கரசி அவர்களின் முப்பத்தியொராம் நாள் நினைவை முன்னிட்டு, அவரது மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், உறவுகள் சார்பாக சுவிஸில் வதியும் “திரு.திருமதி.பாபு, ஹேமா குடும்பத்தினர்” வழங்கிய நிதிப் பங்களிப்பில் வழங்கப்பட்ட விசேட உணவானது மடடக்களப்பு கொக்கட்டிச்சோலை “சக்தி இல்ல” சிறுமிகளுக்கு வழங்கப்பட்டது.

மேற்படி நிகழ்வானது மேற்படி “சக்தி மகளிர்” இல்ல தலைமைப் பொறுப்பாளரும், மண்முனை தென்மேற்கு பிரதேசசபை (கொக்கட்டிச்சோலை) தவிசாளருமான திரு.புஷ்பலிங்கம் அவர்களின் தலைமையில், மட்டக்களப்பு வவுணதீவு பிரதேச தவிசாளர் திரு.சண்முகராஜா விருந்தினராகக் கலந்து சிறப்பிக்க நடைபெற்றது.

இவர்களுடன் “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின்” சார்பில், மட்டக்களப்பு வவுணதீவு பிரதேச உபதவிசாளரும், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் அரசியல் பிரிவான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் மத்தியகுழு உறுப்பினரும், உபதலைவர்களில் ஒருவருமான திரு.பொன் செல்லத்துரை (தோழர்.கேசவன்) அவர்களும் கலந்து சிறப்பித்தார்.

அந்தியேட்டி நிகழ்வில் “சக்தி இல்ல” மாணவிகள் கலந்து அமரர் மங்கையர்கரசி அவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து தீபாரதனை காட்டப்பட்டு தேவாரபாராயணம் பாடப்பட்டு அந்தியேட்டிக் கிரியைகள் நிறைவு பெற்றதுடன், அனைவருக்கும் விசேட உணவு வழங்கப்பட்டது.

அமரத்துவமடைந்த அமரர்.திருமதி. சண்முகநாதன் மங்கையர்க்கரசி அவர்களுக்கு தாயக உறவுகளோடு, மாணிக்கதாசன் நற்பணி மன்றமும் ஆழ்ந்த இரங்கலோடு அஞ்சலி செலுத்துவதோடு அமரர் திருமதி. சண்முகநாதன் மங்கையர்க்கரசி அவர்களது 31 ஆம் நாள் நினைவாக அனுஸ்டிக்கப்பட்டு, 31 ஆம் நாள் அந்தியேட்டி நிகழ்வுக்கு நிதிப்பங்களிப்பினை வழங்கிய அன்னாரது மகனான சுவிஸில் வாதியும்திரு.திருமதி பாபு ஹேமா குடும்பத்தினருக்கு மாணிக்கதாசன் நற்பணி மன்றம் தனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறது

நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்.. -என்றும்
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..

தலைமைச் செயலகம்.
மாணிக்கதாசன் நற்பணி மன்றம்.
வவுனியா, இலங்கை.

30.03 2022.

சரவணை மங்கையற்கரசி அவர்களின் நினைவை முன்னிட்டு, மட்டக்களப்பு “சக்தி இல்லத்தில்” விசேட உணவு வழங்கல்.. (வீடியோ)

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்…
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1

You might also like

Leave A Reply

Your email address will not be published.