;
Athirady Tamil News

புங்குடுதீவு அமரர் “வி.அ” அவர்களின் இருபத்தேழாம் ஆண்டு நினைவாஞ்சலி நிகழ்வு..(படங்கள், வீடியோ)

0

புங்குடுதீவு அமரர் “வி.அ” அவர்களின் இருபத்தேழாம் ஆண்டு நினைவாஞ்சலி நிகழ்வு..(படங்கள், வீடியோ)

“வி.அ” என எல்லோராலும் அன்புடன் அழைக்கப்பட்ட அமரர் திரு.விசுவலிங்கம் அருணாசலம்..

பாசத்தைப் பயிராக்கி,
நேசத்தை உறவாக்கி..
நேர்மையுடன் வாழ்ந்த எங்கள் ஐயாவே..

காலத்தை வீணாக்காது, கம்பீர நடையுடன்,
மடத்துவெளி வயலூர் முருகனுக்கும் திருப்பணியாற்றி,
உமது வாழ்நாளை போக்கி வந்தீரே..

எல்லோருடனும் இனிமையாகப் பழகி,
எம்மையும் இனிதாய் வழிநடத்தி வந்தீர்..

உள்ளத்தை ஒருங்கிணைத்து,
ஒற்றுமையை வலுப்படுத்தி,
உமக்கென சில உறவுகளையும்,
உருவாக்கி வாழ்ந்தீரே..

இவற்றையெல்லாம் செய்துவிட்டு,
எம்முடன் இறுதிவரை வாழாமல்,
வயலூர் முருகனின் அரவணைப்பை,
எளிதில் நாடிச் சென்றதேனோ?..

புங்குடுதீவு ஊரதீவில் பிறந்து “வி.அ” என எல்லோராலும் அன்புடன் அழைக்கப்பட்ட திரு.விசுவலிங்கம் அருணாசலம் அவர்கள் அமரத்துவமடைந்து இருபத்தேழாண்டுகள் நிறைவை முன்னிட்டு, இன்றையதினம் வவுனியா எல்லைக் கிராமத்தில் நடைபெற்ற ஆத்மசாந்தி நிகழ்வும் விசேட உணவு வழங்கும் நிகழ்வும் சிறப்பாக நடைபெற்றது.

மேற்படி நிகழ்வானது மக்கள் மருமக்கள் பேரப்பிள்ளைகள் பூட்ட பிள்ளைகள் மற்றும் உற்றார் உறவினர்கள். சார்பாக அவரது குடும்பத்தினர் வழங்கிய நிதி பங்களிப்பில் “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றது.

மேற்படி நிகழ்வில், மாணிக்கதாசன் நற்பணி மன்ற வவுனியா மாவடட இணைப்பாளர் திரு.பெருமாள் சஞ்சீவன், மாணிக்கதாசன் நற்பணி மன்ற முக்கியஸ்தர்களில் ஒருவரான திருமதி.பவளராணி நவரட்ணம் மற்றும் திருமதி வண்ணம் உபசெயலாளர் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில், திருமதி கோசலா சமுர்த்தி செயலாளர் ஆகியோருடன் அக்கிரமபி பொதுமக்கள் பலரும், மாணவ, மாணவிகளும் கலந்து சிறப்பித்தனர்.

அமரத்துவமடைந்த “வி.அ” என எல்லோராலும் அன்புடன் அழைக்கப்பட்ட அமரர்.திரு.விசுவலிங்கம் அருணாசலம் அவர்களுக்கு தாயக உறவுகளோடு, மாணிக்கதாசன் நற்பணி மன்றமும் ஆழ்ந்த இரங்கலோடு அஞ்சலி செலுத்துவதோடு அமரர்.திரு.விசுவலிங்கம் அருணாசலம் அவர்களின் இருபத்தேழாமாண்டு நினைவு நிகழ்வுக்கு நிதிப்பங்களிப்பினை வழங்கிய அவரது குடும்பத்தினருக்கு “மாணிக்கதாசன் நற்பணி மன்றம்” தனது மேலான நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறது.

நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்.. -என்றும்
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..

தலைமைச் செயலகம்.
மாணிக்கதாசன் நற்பணி மன்றம்.
வவுனியா, இலங்கை.

06.05 2022.

புங்குடுதீவு அமரர் “வி.அ” அவர்களின் இருபத்தேழாம் ஆண்டு நினைவாஞ்சலி நிகழ்வு..(வீடியோ)

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்…
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1

You might also like

Leave A Reply

Your email address will not be published.