;
Athirady Tamil News

யாழில் ஐந்து பிள்ளைகளின் தந்தைக்கு நேர்ந்த துயர சம்பவம்

0

வல்வெட்டித்துறையில் வங்கிக்கு முன்பாக மயங்கி விழுந்த குடும்பஸ்தர் ஒருவர் சனிக்கிழமை (24) உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் மாவடி சமரபாகுவைச் சேர்ந்த 60 வயதுடைய ஐந்து பிள்ளைகளின் தந்தை ஆவார் வல்வெட்டித்துறையில் உள்ள வங்கி ஒன்றுக்கு முன்னால் அவர் மயங்கிய நிலை காணப்பட்டதையடுத்து முச்சக்கர வண்டி சாரதி ஒருவர் அவரை வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார்.

பின்னர் அவரை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.