8 வயது சிறுவனை பலியெடுத்த காட்டு யானை ; தமிழர் பகுதியில் சம்பவம்

திருகோணமலை மாவட்டம், கோமரங்கடவெல – திக்கட்டுவ பகுதியில் காட்டு யானை தாக்கியதில் 8 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் நேற்று சனிக்கிழமை காலை இடம்பெற்றுள்ளது.
தனது தந்தையுடன் சைக்கிளில் சென்றுக்கொண்டிருந்த போதே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் உயிரிழந்த சிறுவனின் சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.