;
Athirady Tamil News

8 வயது சிறுவனை பலியெடுத்த காட்டு யானை ; தமிழர் பகுதியில் சம்பவம்

0

திருகோணமலை மாவட்டம், கோமரங்கடவெல – திக்கட்டுவ பகுதியில் காட்டு யானை தாக்கியதில் 8 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் நேற்று சனிக்கிழமை காலை இடம்பெற்றுள்ளது.

தனது தந்தையுடன் சைக்கிளில் சென்றுக்கொண்டிருந்த போதே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் உயிரிழந்த சிறுவனின் சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.