;
Athirady Tamil News

அனலைதீவு அமரர்.யோகம்மா அவர்களின் நினைவை முன்னிட்டு, மட்டக்களப்பு சக்தி இல்லத்தில் விசேட மதிய உணவு வழங்கல்.. (படங்கள், வீடியோ)

0

அனலைதீவு அமரர்.யோகம்மா அவர்களின் நினைவை முன்னிட்டு, மட்டக்களப்பு சக்தி இல்லத்தில் விசேட மதிய உணவு வழங்கல்.. (படங்கள், வீடியோ)

யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட அமரர்.திருமதி.பசுபதிப்பிள்ளை யோகம்மா அவர்களின் முப்பத்தியொராம் நாள் நினைவாக மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள் மற்றும் உறவுகள் சார்பாக அவரது குடும்பத்தினர் வழங்கிய நிதியில் வாழ்வாதார உதவியாக, மிகப்பெறுமதியான உலருணவுப் பொதிகள் முதல் நிகழ்வாக முல்லைத்தீவு மாவட்டத்தில் வழங்கி வைக்கப்பட்டது நீங்கள் அறிந்ததே இதனைத் தொடர்ந்து இன்று மதியம் மட்டக்களப்பு சக்தி இல்லத்தில் விசேட மதிய உணவு வழங்கப்பட்டது.

அமரர்.திருமதி.பசுபதிப்பிள்ளை யோகம்மா..

அன்னை அரவணைப்பில் நாம்
பெருமை கொண்டோம்
காலன் பிடிதனிலே சென்று
எம்மை வாட விடலாமோ
பாதை தவறிப் போயிருந்தாய் என்றிருந்தோம்
பார விழியோடு பார்த்திருக்கும் எம்மை
எப்போ காண வருவாயோ..

காலனவன் தன் கணக்கை சாலவே செய்யவே
ஞாலம்விட்டு வானம் சென்றீரா?
வானம் சென்ற கானம் கேட்டு
கண்ணீர் விட்டுக் கரைகிறோம்
ஆற்றுவாரில்லை ஆறுதல் சொல்ல

சொற்கள் இல்லை சோகம் தாங்க
மீளாத் துயரில் தவிக்கிறோம்
கண்ணுக் கெட்டா தூரம் சென்றாலும்
எந்நாளும் நீங்காது
உங்கள் நினைவுகள்..
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

அனலைதீவில் பிறந்து கனடாவில் அமரத்துவமடைந்த திருமதி.. அமரர். திருமதி.பசுபதிப்பிள்ளை யோகம்மா அவர்களின் முப்பத்தியொராம் நாள் நினைவாக அவரது மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், உறவுகள் சார்பாக, கனடாவில் வதியும் “அன்னாரின் குடும்பத்தினர்” வழங்கிய நிதிப் பங்களிப்பில் நேற்றுக்காலை முல்லைத்தீவு மாவட்ட புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவில் மண்ணாங்கண்டல் வசந்தபுரம் கிராமத்தில் மேற்படி வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்டது நீங்கள் அறிந்ததே.

அமரர் யோகம்மா அவர்களின் குடும்பத்தினர் தேசியத்தின்பால் மிகுந்த ஈடுபாடு கொண்டதினால், மேற்படி மிகப்பெறுமதியான உலருணவுப் பொதிகள் அடங்கிய பொதிகளை முல்லைத்தீவு மாவட்ட புதுக்குடியிருப்புப் பிரதேசத்தில் வழங்கி வைக்கும்படி “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்திடம்” வேண்டி நிதிப் பங்களிப்பை வழங்கியதால், இவ்வாழ்வாதார உதவிகள் வழங்கி வைக்கப்பட்டது நீங்கள் அறிந்ததே.

முல்லைத்தீவு மாவட்ட புதுக்குடியிருப்பு பிரதேச சில கிராமங்களில் வாழும் வயோதிபக் குடும்பங்கள், கணவரால் கைவிடப்பட்ட குடும்பங்கள், பெண் தலைமைத்துவக் குடும்பங்கள், மிகவும் வறிய குடும்பங்கள் என மாணிக்கதாசன் நற்பணி மன்ற முல்லைத்தீவு மாவட்ட இணைப்பாளர் திரு..கந்தப்பிள்ளை விஜிதன் அவர்களினால் தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு அவரது தலைமையில் வாழ்வாதார உதவியாக உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது நீங்கள் அறிந்ததே.

இதனைத் தொடர்ந்து அமரத்துவமடைந்த அமரர்.திருமதி. பசுபதிப்பிள்ளை யோகம்மா அவர்களின் முப்பத்தியொராம் நாள் நினைவாக இரண்டாவது நிகழ்வாக மட்டக்களப்பு சக்தி இல்ல சிறுமியர்களுக்கான விசேட மதிய உணவும் இன்றையதினம் வழங்கி வைக்கப்பட்டது.

யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட அமரர்.திருமதி.பசுபதிப்பிள்ளை யோகம்மா அவர்களின் முப்பத்தியொராம் நாள் நினைவாக மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள் மற்றும் உறவுகள் சார்பாக அவரது குடும்பத்தினர் வழங்கிய நிதியில் இன்று மதியம் இரண்டாவது நிகழ்வாக மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை “சக்தி இல்ல மாணவிகள்” அனைவருக்கும் விசேட மதிய உணவு வழங்கப்பட்டது.

மேற்படி முப்பத்தியொராம் நாள் அந்தியேட்டி நிகழ்வில் கலந்து கொண்டோர் அமரர் திருமதி பசுபதிப்பிள்ளை யோகம்மா அவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். மேற்படி நிகழ்வுக்கான ஏற்பாட்டை மாணிக்கதாசன் நற்பணி மன்ற சர்வதேச இணைப்பாளர்களில் ஒருவரான கனடா திரு.உதயராஜா அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார்.

அமரர்.பசுபதிப்பிள்ளை யோகம்மா அவர்களின் முப்பத்தியொராம் நினைவு நாளை முன்னிட்டு மேற்படி நிகழ்வானது மேற்படி “சக்தி மகளிர்” இல்ல தலைமைப் பொறுப்பாளரும், மண்முனை தென்மேற்கு பிரதேசசபை (கொக்கட்டிச்சோலை) தவிசாளருமான திரு.புஷ்பலிங்கம் அவர்களின் தலைமையில், மட்டக்களப்பு வவுணதீவு பிரதேச தவிசாளர் திரு.சண்முகராஜா விருந்தினராகக் கலந்து சிறப்பிக்க நடைபெற்றது.

இவர்களுடன் “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின்” சார்பில், மட்டக்களப்பு வவுணதீவு பிரதேச உபதவிசாளரும், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் அரசியல் பிரிவான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் மத்தியகுழு உறுப்பினரும், உபதலைவர்களில் ஒருவருமான திரு.பொன் செல்லத்துரை (தோழர்.கேசவன்) அவர்களும் கலந்து சிறப்பித்தார்.

அமரத்துவமடைந்த அமரர்.திருமதி. பசுபதிப்பிள்ளை யோகம்மா அவர்களுக்கு தாயக உறவுகளோடு, மாணிக்கதாசன் நற்பணி மன்றமும் ஆழ்ந்த இரங்கலோடு அஞ்சலி செலுத்துவதோடு அமரர் திருமதி. பசுபதிப்பிள்ளை யோகம்மா அவர்களது 31 ஆம் நாள் நினைவாக அனுஸ்டிக்கப்பட்டு, 31 ஆம் நாள் அந்தியேட்டி நிகழ்வுக்கு நிதிப் பங்களிப்பினை வழங்கிய அன்னாரது குடும்பத்தினருக்கு மாணிக்கதாசன் நற்பணி மன்றம் தனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறது.

நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்.. என்றும்
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்.

தலைமையகம்,
“மாணிக்கதாசன் நற்பணி மன்றம்”
வவுனியா.

13.07.2022

அனலைதீவு அமரர்.யோகம்மா அவர்களின் நினைவை முன்னிட்டு, மட்டக்களப்பு சக்தி இல்லத்தில் விசேட மதிய உணவு வழங்கல்.. (வீடியோ)

அனலைதீவு அமரர்.யோகம்மா அவர்களின் நினைவை முன்னிட்டு, முல்லைத்தீவில் பெறுமதியான உலருணவுப் பொதிகள் வழங்கல்.. (வீடியோ)

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்..
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1

§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” வீடியோக்கள் அனைத்தையும் பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்.. https://www.youtube.com/channel/UCcqovJhy5b-K7R3CrQz3dLg/videos

You might also like

Leave A Reply

Your email address will not be published.