;
Athirady Tamil News

கொடிகாமத்தில் விபத்து – முதியவர் உயிரிழப்பு – இளைஞன் படுகாயம்!!

0

யாழ்ப்பாணம் கொடிகாமம் – கச்சாய் வீதியில் இடம்பெற்ற விபத்தில் முதியவர் உயிரிழந்துள்ளார்.

அப்பகுதியை சேர்ந்த செல்லையா சற்குணநாதன் (வயது 78) எனும் முதியவரே உயிரிழந்துள்ளார்.

கொடிகாமம் – கச்சாய் வீதி ஊடாக இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் , சைக்கிளில் பயணித்த குறித்த முதியவரை மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளனர்.

விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த கிருஷ்ணகுமார் சுகிந்தன் (வயது 27) எனும் இளைஞனையும் , முதியவரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு வைத்திய சாலையில் அனுமதித்தனர்.

வைத்திய சாலையில் சிகிச்சை பயனின்றி முதியவர் உயிரிழந்த நிலையில் , இளைஞன் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றார்.

குறித்த விபத்து சம்பவம் தொடர்பில் , கொடிகாம பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.