;
Athirady Tamil News

வவுனியாவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தா.சிவசிதம்பரம் அவர்களின் 29ம் ஆண்டு நினைவு தினம் அனுஸ்டிப்பு!! (படங்கள்)

0

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தாமோதரம்பிள்ளை சிவசிதம்பரம் அவர்களின் நினைவு தினம் இன்று (09.11) காலை 9.30 மணியளவில் வவுனியா வைரப்புளியங்குளத்தில் அமைந்துள்ள அன்னாரின் நினைவுத்தூபியில் விழாக்குழுவின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் ப.சத்தியலிங்கம், நகரசபை உறுப்பினர் ந.சேனாதிராஜா, தமிழரசுக் கட்சியின் வவுனியா மாவட்ட தலைவர் கருணாநிதி, முன்னாள் நகரசபை உறுப்பினர் ரி.கே.ராஜலிங்கம், தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் செ.சந்திரகுமார், வர்த்தகர்கள், சமூக சேவையாளர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டு அன்னாரின் திருவுருவச்சிலைக்கு மாலையிட்டு மலர் அஞ்சலி செலுத்தினார்கள். அத்துடன் அவரது செயற்பாடுகள் தொடர்பாகவும் கருத்துரைகளும் இடம்பெற்றன.

இதேவேளை, ஞாபகார்த்த சிலை அமைப்புக் குழுவினரதும் அதன் தலைவர் நா.சேனாதிராசா ஆகியோரதும் வேண்டுகோளுக்கிணங்க வவுனியாவின் மூத்த சட்டத்தரணி முருகேசு சிற்றப்பலம் அவர்களினால் கடந்த 2015ஆண்டு 07ம் மாதம் 25ம் திகதி இச் சிலை திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “கோபி”

You might also like

Leave A Reply

Your email address will not be published.