;
Athirady Tamil News

பாரிய வௌ்ளப் பெருக்கு ஏற்படலாம் – சிகப்பு எச்சரிக்கை !!

0

மஹ ஓயாவின் தாழ்வு நிலப்பகுதிகளில் எதிர்வரும் சில மணிநேரங்களில் பாரிய வௌ்ளப் பெருக்கு ஏற்படலாம் என சிகப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நீர்பாசன திணைக்களம் அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை தெரிவித்துள்ளது.

கிரியுள்ள நீர் அளவீட்டு பகுதியில் இன்று (09) காலை 7 மணியளவில் 8.94 மீற்றர் அளவில் நீர்மட்டம் அதிகரித்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனடிப்படையில் அளவ்வ, திவுலுபிட்டிய, மீரிகம, பன்னல, வென்னப்புவ, நீர்கொழும்பு, கட்டான, நாரம்மல மற்றும் தங்கொட்டுவ பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் வசிப்பவர்கள் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.