;
Athirady Tamil News

சகவீரர்கள் தாக்குதலால் 2019-ல் இருந்து உயிரிழந்த வீரர்கள் எத்தனை பேர்?: சி.ஆர்.பி.எஃப். தகவல்…!!

0

சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் சி.ஆர்.பி.எஃப். வீரர்கள் முகாமில், ஜவான் ஒருவர் திடீரென சக வீரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினார். இதில் 4 பேர் வீரர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 3 பேர் படுகாயமடைந்தனர்.

காயமடைந்த மூவரில், இரண்டு பேர் சிகிச்சைக்காக ராய்ப்பூருக்கு விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். ஆபத்தான நிலையில் இருந்த இருவரும் உயிரிழந்தனர். இதனால் 6 வீரர்கள் உயிரிழந்தனர். இச்சம்பவம் ராய்ப்பூரிலிருந்து 450 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள சுக்மா மாவட்டத்தின் லிங்கம்பள்ளி முகாமில் நடைபெற்றது.

இந்தநிலையில் ‘‘கடந்த 2019-ம் ஆண்டில் இருந்து தற்போதுவரை, சக வீரர்களால் தாக்கப்பட்டு வீரர்கள் உயிரிழந்த சம்பவம் 13 முறை நடைபெற்றுள்ளது. இதில் 18 வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.

நேற்று சுக்மாவில் நடைபெற்ற தாக்குதலுடன் 2021-ம் ஆண்டு இதுவரை ஐந்து சம்பவங்கள் நடைபெற்றுள்ளது’’ என சி.ஆர்.பி.எஃப் தகவல் வெளியிட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.