;
Athirady Tamil News

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தார் அமித்ஷா..!!

0

திருப்பதியில் உள்துறை மந்திரி அமித்ஷா தலைமையில் இன்று தென்மண்டல கவுன்சில் கூட்டம் நடக்கிறது. இதில் கர்நாடக முதல் மந்திரி பசவராஜ் பொம்மை உள்பட தமிழ்நாடு, தெலுங்கானா, ஆந்திரா, புதுச்சேரி, கோவா, கேரளா மாநிலங்களின் முதல் மந்திரிகள் பங்கேற்கின்றனர்.

இதற்கிடையே, திருப்பதியில் தெற்கு மண்டல வளர்ச்சி கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொள்ள உள்துறை மந்திரி அமித்ஷா நேற்று டெல்லியில் இருந்து விமானம் மூலம் ரேணிகுண்டா வந்திறங்கினார். அங்கு அவருக்கு ஆந்திர முதல் மந்திரி ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டி பூங்கொத்து வழங்கி வரவேற்றார்.

இந்நிலையில், திருப்பதி திருமலையில் உள்ள ஏழுமலையான் கோவிலில் உள்துறை மந்திரி அமித்ஷா நேற்று இரவு சாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் மரியாதை அளிக்கப்பட்டது. அவருடன் முதல் மந்திரி ஜெகன் மோகன் ரெட்டியும் உடன் சென்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.