;
Athirady Tamil News

நெடுந்தீவில் கூடியளவு மழைவீழ்ச்சி!!

0

நேற்றுப் புதன்கிழமை(24)காலை-08.30 மணி முதல் இன்று வியாழக்கிழமை(25) காலை-08.30 மணி வரையான 24 மணித்தியாலங்களில் யாழ்.மாவட்டத்தில் நெடுந்தீவில் கூடியளவு மழைவீழ்ச்சியாக 64.9 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாகத் திருநெல்வேலி வானிலை அவதான நிலையத்தின் பொறுப்பதிகாரி ரி.பிரதீபன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்தக் காலப் பகுதியினுள் பருத்தித்துறையில் 55.2 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும், அச்சுவேலியில் 53.3 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும், நயினாதீவில் 53.0 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும்,யாழ்ப்பாணம் நகர்ப் பகுதியில் 48.8 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும், திருநெல்வேலியில் 39.6 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும், தெல்லிப்பழையில் 35.5 மில்லிமீற்றர் மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும் பதிவாகியுள்ளன எனவும் அவர் மேலும் கூறினார்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.