;
Athirady Tamil News

வீடொன்று உடைத்து 14 பவுண் நகை கொள்ளை!!

0

இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சங்கானை – நிற்சாமம், சிலம்பு புளியடி கோவிலுக்கு அருகே உள்ள வீட்டில் இருந்த 14 பவுண் நகை களவாடப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,

குறித்த வீட்டில் உள்ளவர்கள் மு.ப 10 மணிக்கு கொண்டாட்டம் ஒன்றிற்கு சென்றுவிட்டு, நேற்று பி.ப. 5 மணிக்கு வீட்டிற்கு வந்து வீட்டினை அவதானித்தனர்.

இதன்போது கதவு உடைத்து நகை களவாடப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

இந்நிலையில் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் இது தொடர்பாக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இளவாலை பொலிஸார் சந்தேக நபரைத்தேடி வலைவீசி வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.