;
Athirady Tamil News

விண்வெளிக்கு சுற்றுலா சென்ற ஜப்பானிய கோடீஸ்வரர் பூமி திரும்பினார்…!!

0

ஜப்பானை சேர்ந்த மிகப்பெரும் கோடீஸ்வரரான யுசாகு மெசாவா சோயுஸ் எம்20 என்ற ரஷிய விண்கலம் மூலம் கடந்த 8ந் தேதி விண்வெளிக்கு சுற்றுலா சென்றார்.

46 வயதான யுசாகு மெசாவாவுடன் அவரது உதவியாளர் யோசோ ஹிரானோ என்பவரும் அலெக்சாண்டர் மிசுர்கின் என்ற ரஷிய விண்வெளி வீரரும் விண்வெளி சென்றனர்.

12 நாட்கள் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் தங்கியிருந்த யுசாகு மெசாவா உள்ளிட்ட 3 பேரும் அதே சோயுஸ் எம்20 விண்கலத்தில் நேற்று முன்தினம் இரவு பூமிக்கு புறப்பட்டனர்.

இந்த விண்கலம் ரஷிய நேரப்படி நேற்று காலை 06:16 மணிக்கு கஜகஸ்தான் நாட்டின் தென்கிழக்கில் உள்ள பாலைவன பகுதியில் பத்திரமாக தரையிறங்கியது.

இந்த பயணத்தின் மூலம் 12 ஆண்டுகளுக்கு பின் சொந்த செலவில் விண்வெளிக்கு சென்ற முதல் நபர் என்ற பெருமை யுசாகு மெசாவா பெற்றுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.