;
Athirady Tamil News

ராஜஸ்தானில் மேலும் 52 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு…!!

0

ராஜஸ்தானில் இன்று 52 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், மாநிலத்தில் மொத்த பாதிப்பு 121 ஆக உயர்ந்துள்ளது.

தலைநகர் ஜெய்ப்பூரில் மட்டும் இன்று 38 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. பிரதாப்கர், சிரோஹி மற்றும் பிகானெர் ஆகிய மாநிலங்களில் தலா 3 பேருக்கும், ஜோத்பூரில் 2 பேருக்கும், அஜ்மீர், சிகார் மற்றும் பில்வாராவில் தலா ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்று ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 9 பேர் வெளிநாட்டிலிருந்து திரும்பியவர்கள். 4 பேர் வெளிநாட்டு பயணிகளுடன் தொடர்பில் இருந்தவர்கள். 12 பேர் பிற மாநிலங்களுக்கு பயணம் செய்து திரும்பியவர்கள்.

ஒமைக்ரான் நோயாளிகள் ஆர்.யு.எச்.எஸ். மருத்துவமனையில் உள்ள சிறப்பு வார்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதுவரை பாதிக்கப்பட்ட 121 பேரில் 61 பேர் குணமடைந்துள்ளனர். வெள்ளிக்கிழமை மாலை நிலவரப்படி, மாநிலத்தில் 963 கொரோனா நோயாளிகள் சிகிச்சையில் உள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.