;
Athirady Tamil News

ஜம்மு காஷ்மீரில் கல்லூரி மாணவர்கள் 13 பேருக்கு கொரோனா…!!!!

0

தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு இந்தியாவில் வேகமாகப் பரவ தொடங்கியுள்ளது. இதனால் குறைந்து வந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் மாநிலம் கத்ராவில் உள்ள ஸ்ரீ மாதா வைஷ்ணவி தேவி பல்கலைக்கழகத்தில் படித்து வரும் 13 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானது.

இதையடுத்து, தொற்று உறுதி செய்யப்பட்ட மாணவர்கள் தனிமைப் படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், மறு உத்தரவு வரும் வரை பல்கலைக்கழகத்தை மூட மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.