;
Athirady Tamil News

மாத்தளையில் கைதான முக்கிய பெண்!!

0

மாத்தளை, அதனை அண்டியப் பகுதிகளுக்கு போதைப்பொருளை விற்பனை செய்துவந்த பிரதான பெண் சந்தேகநபர் உள்ளிட்ட மூவரை பொலிஸார் நேற்று முன்தினம் (01) கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட பெண் நீண்ட நாட்களாக போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வருதாகவும், இதற்கு முன்னரும் சந்தேகநபர் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டப் பின்னர் மீண்டும் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இப்பெண்ணிடமிருந்து 09 கிராம் ஐஎஸ் போதைப்பொருளும், போதைப்பொருள் வர்த்தகத்தால் கிடைத்த 41,300 ரூபாயையும் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு இப்பெண் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.