;
Athirady Tamil News

மதுபான போத்தல்களுடன் ஒருவர் கைது!!

0

கிளிநொச்சி தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குமாரசாமிபுரம் பகுதியில் சட்டவிரோதமான வகையில் மதுபான போத்தல்கள் விற்பனை செய்வதற்காக கொண்டு சென்றதாக சந்தேக நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தருமபுரம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டி.எம் சதுரங்கவிற்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலையடுத்து சோதனை மேற்கொள்ளப்பட்டதில் குறித்த மதுபான போத்தல்களுடன் சந்தேக நபர் இன்று (29) கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரை நாளை (30) கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தருமபுர பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்

You might also like

Leave A Reply

Your email address will not be published.