;
Athirady Tamil News

தமிழர் பகுதியில் குழந்தையின் கழுத்தில் கத்தி வைத்து கொள்ளையடித்த மூவர் கைது

0

வவுனியாவில் பெண் ஒருவரை வழிமறித்து அவருடைய குழந்தையின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி கொள்ளையடித்த மூவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த கைது நடவடிக்கையானது, வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறையினரால் நேற்று(26) மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், வவுனியா, சிந்தாமணிப் பிள்ளையார் ஆலய வீதி ஊடாக கடவுச் சீட்டு அலுவலகத்திற்கு கடந்த 17 ஆம் திகதி அதிகாலை பெண் ஒருவர் தனது குழந்தையுடன் மோட்டர் சைக்கிளில் சென்றுள்ளார்.

முறைப்பாடு
அதன்போது, குறித்த வீதியில் முகத்தை மூடி துணிகளால் கட்டியபடி நின்ற மூன்று இளைஞர்கள் குறித்த பெண்ணை வழிமறித்து அவருடைய குழந்தையின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி அவர் அணிந்திருந்த நகைகளை அபகரித்ததுடன், அவரின் மோட்டர் சைக்கிளையும் பறித்து சென்றனர்.

அதனை தொடர்ந்து, இச் சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட பெண் வவுனியா தலைமை காவல்நிலைய குற்றத்தடுப்பு பிரிவில் முறைப்பாடு செய்திருந்தார்.

பின்னர் விசாரணைகளின் போது குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சிதம்பரபுரம் (வயது 35), மதவுவைத்தகுளம் (வயது 35), சிறிராமபுரம் (வயது 34) ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 3 இளைஞர்கள் காவல்துறையினரால் செய்யப்பட்டுள்ளனர்.

மேலதிக விசாரணை
அத்தோடு, அபகரிக்கப்பட்ட மூன்று அரைப் பவுண் நகைகள் உருக்கப்பட்ட நிலையில் யாழில் உள்ள நகைகடை ஒன்றில் இருந்து மீட்கப்பட்டதுடன் பறித்து செல்லப்பட்ட மோட்டர் சைக்கிள் கனகராயன்குளம் பகுதியில் விற்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

அதேவேளை, இரண்டு பென்ரன் மற்றும் லப்டொப் என்பனவும் சந்தேகநபர்களிடமிருந்து மேலதிகமாக மீட்கப்பட்டுள்ளது.

இவை கனகராயன்குளம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து திருடப்பட்டவை என விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

மேலதிக விசாரணைகளின் பின் சந்தேகநபர்கள் மூவரையும், சான்றுப் பொருட்களையும் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக காவல்துறையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.