;
Athirady Tamil News

IMF பிரதிநிதியுடன் பசில் ராஜபக்ஷ சந்திப்பு!!

0

இலங்கை வந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதி இன்று (14) நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவை சந்தித்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய பசுபிக் பிராந்தியத்தின் பணிப்பாளர் Changyong Rhee, நிதி அமைச்சரும் திறைசேரி செயலாளருமான எஸ்.ஆர். ஆட்டிகலவை கொழும்பில் சந்தித்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி சேவை தெரிவித்துள்ளது.

இந்த சந்திப்பின் போது சர்வதேச நாணய நிதியம் (IMF) இலங்கையின் பொருளாதார மீளாய்வு தொடர்பில் கருத்துக்களை பரிமாறிக் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதி நாளை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.