இந்தோனேசியாவில் படகு கவிழ்ந்து விபத்து ; 11பேர் மாயம்
இந்தோனேசியாவின் மேற்கு சுமத்ரா மாகாணத்தில் உள்ள மென்டவாய் தீவுகளுக்கு அருகே சீரற்ற வானிலை காரணமாக படகு கவிழ்ந்ததில் 18 பேர் காணாமல் போயுள்ளனர்.
காணாமல் போனவர்களில் 7 பேர் மீட்கப்பட்டதாகவும் ஏனைய 11 பேரையும் மீட்கும் பணியில் மீட்புப் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
மென்டவாய் தீவுகளைச் சுற்றி நேற்று முன்தினம் (14) குறித்த படகு பயணித்தபோது படகு கவிழ்ந்ததையடுத்து இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.