;
Athirady Tamil News

கலாஓயாவில் விழுந்து வனவிலங்கு காப்பாளர் ஒருவர் உயிரிழப்பு!!

0

வனஜீவராசிகள் திணைக்களத்தின் வனவிலங்கு காப்பாளர் ஒருவர் கலாஓயாவில் விழுந்து உயிரிழந்துள்ளதாக வனத்தவில்லுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்து நேற்று (15) பிற்பகல் 2.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

உயிரிழந்தவர் எழுவன்குளம் வில்பத்து நுழைவாயிலில் பணிபுரியும் வனவிலங்கு காப்பாளர் எச். எம். பி. ஏ. ரத்நாயக்க எனும் 33 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.