;
Athirady Tamil News

அனைத்து பிணைமுறி ஏலங்களும் நிராகரிப்பு!!

0

இன்றைய தினம் அழைக்கப்பட்ட அனைத்து பிணைமுறி ஏலத்திற்கான கிடைக்கப்பட்ட அனைத்து ஏலங்களையும் நிராகரிக்கத் தீர்மானித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் பொதுக் கடன் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இரண்டு முதிர்ந்த காலங்களின் கீழ் ரூ. மொத்தம் 45,000 மில்லியன் ரூபா பெறுமதியான பத்திரங்கள் ஏலத்தில் விடப்பட்டன.

இதன்போது மார்ச் 15, 2025 அன்று காலாவதியாகும் 10.25% ஆண்டு வட்டி விகிதத்தின் கீழ் ரூ. 25,000 மில்லியன் பிணை முறி மற்றும் மே மாதம்15, 2029 அன்று காலாவதியாகும் ரூ. 20,000 மில்லியன் மதிப்புள்ள பிணைமுறிகள் ஏலத்தில் விடப்பட்டன.

இதற்காக முறையே 29,092 மில்லியன் ரூபாய் மற்றும் 29,855 மில்லியன் ரூபாய்கான ஏலம் கோரப்பட்டிருந்ததாக என இலங்கை மத்திய வங்கியின் பொதுக் கடன் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.