;
Athirady Tamil News

பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் அறிவிப்பு !!

0

பிறப்பு சான்றிதழ், இறப்பு சான்றிதழ் மற்றும் திருமண பதிவுச் சான்றிதழின் பிரதிகள் வழங்கும் செயற்பாடுகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பதிவாளர் நாயகம் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பதிவாளர் நாயகம் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தரவு கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாக, நாடளாவிய ரீதியில் பிறப்பு, இறப்பு மற்றும் திருமண பதிவுச் சான்றிதழ் பிரதிகளை வழங்கும் நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டுள்ளன.

இந்த நிலையில் தரவுக்கட்டமைப்பை வழமைக்கு கொண்டுவரும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.