;
Athirady Tamil News

6 வீடுகளில் திருட்டு, கொள்ளை; தம்பதி கைது: 30 பவுண் நகை கைப்பற்றல்!!

0

யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவில் அண்மையக் காலமாக இடம்பெற்று வந்த திருட்டு மற்றும் கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய தம்பதி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களிடமிருந்து சுமார் 30 தங்கப்பவுண் நகைகள் கைப்பற்றப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்தனர்.

“யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவில் 6 வீடுகளில் இடம்பெற்ற கொள்ளை மற்றும் திருட்டு தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றன.

அவை தொடர்பில் யாழ்ப்பாணம் தலைமையக பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

பூம்புகாரைச் சேர்ந்த கணவனும் மனைவியும் கைது செய்யப்பட்டனர். கணவன் திருட்டு மற்றும் கொள்ளையில் ஈடுபட்ட குற்றச்சாட்டிலும் கொள்ளையிட்ட நகைகளை விற்பனை செய்த குற்றச்சாட்டில் மனைவியும் கைது செய்யப்பட்டனர்.

சந்தேக நபர்களினால் விற்பனை செய்யப்பட்ட 30 தங்கப் பவுண் நகைகள் யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா நகைக் கடைகளில் கைப்பற்றப்பட்டன” என்று பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர்கள் இருவரும் இன்று யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளனர்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.