;
Athirady Tamil News

மருந்துகள் தொடர்பான அறிக்கை பிரதமரால் கோரப்பட்டுள்ளது !!

0

இலங்கையில் தட்டுபாடு ஏற்பட்டுள்ள அத்தியாவசிய மருந்து வகைகள் தொடர்பான அறிக்கையை உடனடியாக முன்வைக்குமாறு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சுகாதார அமைச்சுக்கு உத்தரவிட்டுள்ளார்.

தற்போதைய நெருக்கடி காரணமாக ஏற்பட்டுள்ள மருந்து தட்டுபாடுக்கு, குறுகிய கால தீர்வு குறித்து, இன்று நடைபெற்ற கலந்துரையாடலிலேயே பிரதமர் மேற்கண்டவாறு உத்தரவிட்டுள்ளார்.

மேலும் இந்திய கடன் வசதியின் கீழ், இலங்கைக்கு கிடைத்த 200 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான மருந்துகளை கொள்வனவு செய்ய டொலர் இன்மை காரணமாக பிரச்சினை ஏற்பட்டதாகவும், எனினும் இரு அரசுகளுக்கிடையில் கலந்துரையாடல்கள் இடம்பெற்றதையடுத்து, இலங்கை ரூபாயில் மருந்துக்கான கட்டணத்தை செலுத்துவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது என்றும் இதன்போது பிரதமர் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.