;
Athirady Tamil News

விவாகரத்து தராததால் இளம்பெண்ணை கொன்று உடலை போர்வையில் கட்டி ஏரியில் வீச்சு- கணவர் உள்பட 4 பேர் கைது..!!

0

திருப்பதி அடுத்த கோர்லகுண்டாவை சேர்ந்தவர் பத்மா இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த வேணுகோபாலுக்கும் பெரியோர்கள் முன்னிலையில் திருமணம் நடந்தது.

திருமணமானதில் இருந்தே வேணுகோ பாலுக்கும், பத்மாவுக்கும் தகராறு இருந்து வந்தது.

மேலும் வேணு கோபாலின் பெற்றோர் பாண்டுரங்கச்சாரி மற்றும் ராணி ஆகியோர் கூடுதல் வரதட்சணை கேட்டு பத்மாவை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் துன்புறுத்தி வந்தனர்.

இந்த நிலையில் பத்மாவிடம் இருந்து விவாகரத்து கோரி வேணுகோபால் நோட்டீஸ் அனுப்பினார். ஆனால் பத்மா தனது கணவரை விவாகரத்து செய்ய விரும்பவில்லை. இதனால் வேணுகோபால் ஆத்திரமடைந்தார். அவர் பத்மாவை கொலை செய்ய திட்டமிட்டார்.

ஐதராபாத்தில் தனது அறையில் தங்கியுள்ள கர்நாடகாவை சேர்ந்த சந்தோஷ் என்பவரை காரில் அழைத்துக் கொண்டு திருப்பதிக்கு வந்தார்.

அவர்கள் பத்மாவின் வீட்டிற்கு சென்று பத்மாவை காரில் அழைத்துக் கொண்டு சத்தியநாராயணபுரத்தில் உள்ள வீட்டிற்கு சென்றனர்.

அங்கு வேணுகோபால் மரக்கட்டையால் பத்மாவின் தலையில் அடித்தார். இதில் காயமடைந்த அவர் மயங்கி விழுந்து இறந்தார்.

அங்கிருந்த சந்தோஷ் மற்றும் வேணுகோபாலின் பெற்றோர் ஆகிய 4 பேரும் பத்மாவின் உடலை போர்வையால் போர்த்தி, உடலை இறுக்கி கட்டி காரின் பின்பக்க டிக்கியில் வைத்து வெங்கடாபுரம் குளத்தில் வீசினர்.

பத்மா தனது கணவர் வேணுகோபாலுடன் ஐதராபாத்தில் இருப்பதாக பத்மாவின் பெற்றோர் நினைத்தனர். விவாகரத்து வழக்குக்காக வேணுகோபால், பத்மாவை கோர்ட்டுக்கு அழைத்து வருவார் என பத்மாவின் பெற்றோர் கருதி இருந்தனர்.

ஆனால் மே 18-ந் தேதி விவாகரத்து வழக்கை ஒத்திவைக்க வேணுகோபால் வந்தார். கோர்ட்டு வளாகத்தில் பத்மா குறித்து பத்மாவின் பெற்றோர் வேணுகோபாலிடம் கேட்டபோது அவர் சரியான பதில் அளிக்கவில்லை.

இதனால் சந்தேகம் அடைந்த அவர்கள் கிழக்கு போலீசில் புகார் செய்தனர்.

போலீசாரின் விசாரணையில் பத்மாவை கொலை செய்து ஏரியில் வீசியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 4 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் திருப்பதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.