;
Athirady Tamil News

கர்நாடக சுகாதாரத்துறை மந்திரி சுதாகருக்கு கொரோனா உறுதி..!!

0

இந்தியாவில் நேற்று 3,712 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது.

இந்நிலையில், கர்நாடக சுகாதாரத்துறை மந்திரி கே.சுதாகருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர் மருத்துவர்கள் அறிவுரைப்படி வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்டு உள்ளார்.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில், தற்போது எனக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. எனக்கு மிதமான அறிகுறிகள் உள்ளன. ஏற்கனவே நான் முழுமையாக தடுப்பூசி எடுத்துள்ளேன். கடந்த சில நாட்களாக என்னுடன் தொடர்பு கொண்டுள்ள எவரும், தங்களைப் பரிசோதித்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.