;
Athirady Tamil News

சிறுமியை காரில் கடத்தி கூட்டு பலாத்காரம்- 3 பேர் கைது..!!

0

தெலுங்கானா மாநிலம், ஐதராபாத் பகுதியை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவருடன் படிக்கும் தோழிக்கு கடந்த மாதம் 25-ந் தேதி ஜூப்ளி ஹில்ஸ் பகுதியிலுள்ள சொகுசு ஓட்டலில் பிறந்தநாள் கொண்டாட்டம் நடந்தது.

விழாவில் 150-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 80 பேர் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பிறந்தநாள் விழா முடிந்து சிறுமி படிக்கட்டு வழியாக வெளியே வந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த 5 வாலிபர்கள் சிறுமியை தூக்கி காரில் கடத்திச் சென்றனர். சிறுமி தன்னை விட்டுவிடும்படி கும்பலிடம் மன்றாடினார். ஆனாலும் வலுக்கட்டாயமாக சிறுமியை காரில் வைத்தே 5 பேரும் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர்.

சுமார் 2 மணி நேரம் இந்த கொடூரம் நடந்தது. அதன் பிறகு மீண்டும் சிறுமியை கொண்டு வந்து சொகுசு ஓட்டலுக்கு வெளியே காரில் இருந்து தள்ளிவிட்டு தப்பிச் சென்றனர். அங்கிருந்து சிறுமி வீடு திரும்பினார். பிறந்தநாள் விழாவுக்கு சென்ற மகள் கழுத்தில் காயங்களுடன், சோர்வாக வீட்டிற்கு வந்ததைக் கண்ட அவரது பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து சிறுமியிடம் விசாரித்தனர். அப்போது நடந்த சம்பவம் குறித்து சிறுமி கூறினார். சிறுமியின் பெற்றோர் இது குறித்து ஜூப்ளி ஹில்ஸ் போலீசில் புகார் செய்தனர்.

முதலில் போலீசார் மானபங்க வழக்கு பதிவு செய்திருந்தனர். ஆனால் மனநல டாக்டரிடம் அந்த சிறுமி பேசியபோது, தன்னை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர் என்ற அதிர்ச்சி தகவலை வெளியிட்டார்.

இதையடுத்து போலீசார் கூட்டு கற்பழிப்பு என்று மாற்றி வழக்குப் பதிவு செய்தனர். மேலும் ஓட்டலுக்கு வெளியே உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அப்போது தெலுங்கானா மாநில உள்துறை மந்திரி முகமது அலியின் மகன், ஐ.எம்.ஐ ஒவைசி கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏவின் மகன், தெலுங்கானா மாநில வக்புபோர்டு தலைவரின் மகன் உட்பட 5 பேர் சிறுமியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதில் 3 பேர் சிறுவர்கள் ஆவார்கள்.

பலாத்கார வழக்கில் மந்திரி மற்றும் எம்.எல்.ஏ மகன்கள் சம்பந்தப்பட்டு இருப்பதால் போலீசார் அவர்களை கைது செய்வதில் மெத்தனமாக நடந்து கொள்வதாக பல்வேறு அரசியல் கட்சியினர் குற்றம்சாட்டினர்.

பலாத்கார வழக்கில் சம்பந்தப்பட்டவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என பா.ஜ.க. சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டது.

தலைமறைவாக உள்ளவர்களை தப்ப வைக்க போலீசார் முயற்சி செய்வதாக தெலுங்கானா பா.ஜனதா தலைவர் பண்டி சஞ்சய் குற்றம்சாட்டியுள்ளார். அவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என அவர் போராட்டம் அறிவித்துள்ளார்.

இந்த நிலையில் சிறுமியை காரில் கூட்டு பலாத்காரம் செய்த விவகாரம் தொடர்பாக ஐதராபாத் போலீசார் 3 பேரை கைது செய்து உள்ளனர். சதுதீன் மாலிக்கை போலீசார் முதலில் கைது செய்தனர். அதை தொடர்ந்து மேலும் 2 சிறுவர்கள் கைது செய்யப்பட்டனர். பள்ளி மாணவர்களான இவர்களில் ஒருவன் ஆளும் கட்சியான தெலுங்கானா ராஷ்டிரிய சமிதியின் உள்ளூர் தலைவரின் மகன் ஆவார்.

சிறுமி கற்பழிப்பு வழக்கில் 5 பேரில் 3 பேர் பிடிபட்டுள்ளனர். 2 பேர் தலைமறையாக உள்ளனர். மந்திரி, எம்.எல்.ஏவின் மகன்களாக அவர்கள் கோவாவுக்கு தப்பிசென்றுள்ளனர். அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.