;
Athirady Tamil News

காதலிக்க மறுத்த பெண்ணை 14 முறை குத்திக் கொன்ற கல்லூரி நண்பன்! – கர்நாடகாவில் பகீர் சம்பவம்

0

கர்நாடகா மாநிலம், ஹூப்ளி மாநகராட்சி உறுப்பினர் நிரஞ்சன் ஹிரேமாதாவின் மகள் நேஹா. இவர் ஹூப்ளியில் உள்ள பிவிபி கல்லூரியில் படித்து வந்தார். அவருடன் படித்து வந்த மாணவர் பாகல் ஃபயாஸ், நேஹாவுடன் நட்புடன் பழகி வந்துள்ளார்.

நாளடைவில் ஃபயாஸின் நட்பு காதலாக மாறியுள்ளது. காதலை நேஹாவிடம் கூறிய ஃபயாஸ் அவருடைய காதலை ஏற்குமாறு நேஹாவை வற்புறுத்தியுள்ளார். இதனால் ஃபயாஸிடம் பேசுவதை நேஹா முற்றிலுமாக தவிர்த்துள்ளார்.

இதனால் கோபமடைந்த ஃபயாஸ் நேஹாவை கடந்த 18-ம் தேதி கழுத்தில் பலமுறை கத்தியால் குத்தியுள்ளார். இதனால் பலத்த காயமடைந்த நேஹாவை கல்லூரி ஊழியர்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். சிகிச்சை பலனின்றி நேஹா உயிரிழந்தார். விசாரணையில் ஃபயாஸ், நேஹாவை 9 முறை குத்தியதாக சம்பவத்தை நேரில் பார்த்த கல்லூரி மாணவர்கள் தெரிவித்தனர்.

ஃபயாஸ் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது உடல் பரிசோதனை அறிக்கை வெளியாகியுள்ளது. அறிக்கையில் நேஹா 14 முறை குத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.