;
Athirady Tamil News

கோழிக்கோடு அருகே சில்மிஷம் செய்துவிட்டு ஓடிய சிறுவனை துரத்தி பிடித்த இளம்பெண் ..!!

0

கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் வேலை முடிந்து வீட்டிற்கு தனியாக நடந்து சென்றார். ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் சென்ற போது சிறுவன் ஒருவன், அந்த பெண்ணிடம் செக்ஸ் சில்மிஷத்தில் ஈடுபட்டான். அதிர்ச்சி அடைந்த பெண், அந்த சிறுவனை கண்டித்ததோடு அவனை பிடிக்க முயன்றார். உடனே அந்த சிறுவன், அங்கிருந்து தப்பியோடினான். அந்த பெண்ணும், சிறுவனை துரத்தி சென்றார். சுமார் 200 மீட்டர் தூரம் ஓடி அந்த சிறுவனை மடக்கி பிடித்தார். இதற்கிடையே சிறுவனை இளம்பெண் துரத்தி செல்வதை பார்த்த கிராமத்தினரும் அங்கு திரண்டனர். அவர்களும் சேர்ந்து சிறுவனை பிடித்ததோடு, இதுபற்றி போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார், சிறுவனை பிடித்து விசாரணை நடத்தினர். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறுவர் சீர்திருத்த ஜெயிலில் அடைக்கப்பட்டார். இதற்கிடையே சிறுவனை இளம்பெண் விரட்டி பிடித்த தகவல் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.