;
Athirady Tamil News

அக்னிபாத் போராட்டம் எதிரொலி: 35 ரெயில்கள் ரத்து..!!

0

மத்திய அரசின் அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. இதன் எதிரொலியால், பீகார், உத்தரப் பிரதேசம், அரியானா உள்பட பல்வேறு மாநிலங்களிலும் இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். குறிப்பாக, பீகார், உ.பி மாநிலங்களில் ரெயில்களில் தீ வைத்து எரித்ததால் போராட்டம் வன்முறையாக மாறியுள்ளது.

இதனால், சுமார் 35 ரெயில்கள் ரத்து செய்யப்ப்டடுள்ளதாகவும், 13 குறுகிய கால இடைவெளியில் நிறுத்தப்பட்டுள்ளன என்றும் இதுவரை 200க்கும் மேற்பட்ட ரெயில்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். போராட்டம் காரணமாக, மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள கிழக்கு மத்திய ரெயில்வேயில் எட்டு ரெயில்களின் செயல்பாடுகளை கண்காணித்து வருவதாகவும், நிலைமை மாறும்போது அவற்றின் இயக்கம் குறித்து முடிவு செய்யப்படும் என்றும் ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.