;
Athirady Tamil News

எரிபொருள் தொடர்பில் அறிக்கை கோரியுள்ள உயர் நீதிமன்றம்!!

0

எரிபொருள் கொள்வனவு, விநியோகம் மற்றும் எரிபொருள் விநியோகம் ஆகியவற்றில் எந்தெந்த துறைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது என்பதை விளக்கி அடுத்த மாதம் 12 ஆம் திகதிக்கு முன்னர் நீதிமன்றில் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்யுமாறு சட்டமா அதிபருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தினால் முன்வைக்கப்பட்ட இரண்டு அடிப்படை உரிமை மனுக்களை இன்று (04) விசாரணைக்கு எடுத்துக்கொண்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

விஜித் மலல்கொட, மஹிந்த சமயவர்தன மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற குழு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.