;
Athirady Tamil News

மோட்டார் சைக்கிளில் சென்ற சிறுவனை கடித்து குதறிய வளர்ப்பு நாய்; நாயுடன் போராடி மகனை மீட்ட தந்தை..!!

0

பஞ்சாப்பில் நாய் கடித்ததில் 13 வயது சிறுவன் படுகாயமடைந்தான். அந்த சிறுவனின் தந்தை நாயுடன் போராடி சிறுவனின் உயிரைக் காப்பாற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் மாவட்டம் கோட்லி பாம் சிங் என்ற கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் தான் வளர்க்கும் செல்லப்பிராணியான பிட்புல் வகை நாயுடன் வீதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக தந்தையுடன் மோட்டார்சைக்கிளில் வந்த 13 வயது சிறுவனைப் பார்த்து, பிட்புல் நாய் குரைத்துள்ளது. பின்னர் உரிமையாளரின் பிடியிலிருந்து பாய்ந்தோடிய நாய், சிறுவனை கடிக்கத் தொடங்கியது. இதைக்கண்ட சிறுவனின் தந்தை, அவனை காப்பாற்ற முயற்சித்தார். நாயின் உரிமையாளர் நாயை கட்டுக்குள் கொண்டுவந்தார் எனத் தெரிகிறது. கடைசியில் சிறுவனின் தந்தை, நாயிடமிருந்து சிறுவனைக் காப்பாற்றிவிட்டார். ஆனால், அதற்குள் நாய் சிறுவனின் முகம், காது ஆகிய இடங்களில் கடித்துவிட்டது. படுகாயமடைந்த சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறான். சிறுவனின் காதில் கடுமையான காயம் ஏற்பட்டுள்ளதாகவும், மற்றபடி சிறுவன் நலமுடன் இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்

You might also like

Leave A Reply

Your email address will not be published.