;
Athirady Tamil News

பெண்ணிடம் தங்கசங்கிலி பறிப்பு; 2 பேர் கைது..!!

0

ராமநகர்: கர்நாடக மாநிலம் ராமநகர் மாவட்டம் குடுரு கிராமத்தை சேர்ந்தவர் நஞ்சப்பா. இவரது மனைவி போரம்மா. சம்பவத்தன்று இந்த தம்பதி வீட்டில் உறங்கி கொண்டிருந்தனர். அதிகாலை 3 மணியளவில் நஞ்சப்பா எழுந்து வீட்டில் இருந்த கழிவறைக்கு சென்றார். அப்போது வீட்டிற்குள் நுழைந்த மர்மநபர்கள் கழிவறை கதவை பூட்டினர். மேலும் வீட்டில் இருந்த போரம்மா கழுத்தில் அணிந்திருந்த 40 கிராம் தங்க சங்கிலியை பறித்து விட்டு தப்பி சென்றனர். இதுகுறித்து தம்பதி கொடுத்த புகாரின்பேரில் குடுரு போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் ஜலஹள்ளி கிராமத்தை சேர்ந்த பசவராஜ் மற்றும் ராஜனுகுந்தே கிராமத்தை சேர்ந்த மஞ்சுநாத் என்பதும் தெரியவந்தது. அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.