;
Athirady Tamil News

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க ரூ.300 டிக்கெட்டுகள் நாளை வெளியீடு..!!

0

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பவித்ரோற்சவம் நடக்க உள்ளது. இதனால் வருகிற 7, 8, 9, 10-ந் தேதிக்கான ரூ.300 டிக்கெட்டுகள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ரூ.300 டிக்கெட்டுகள் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி அளவில் திருமலை-திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளது. எனவே பக்தர்கள் ரூ.300 டிக்கெட்டுகள் முன்பதிவு செய்து குறிப்பிட்ட நாளில் திருமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்யலாம். மேலும் வருகிற 9 மற்றும் 10-ந் தேதிகளில் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான சாமி தரிசனமும் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேற்கண்ட தகவலை திருமலை-திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.