;
Athirady Tamil News

கட்டுத்துப்பாக்கி வெடித்து பெண் காயம் !!

0

வவுனியா – ஈச்சங்குளம் சாலம்பன் பகுதியில் நேற்று காலை கட்டுத்துப்பாக்கி வெடித்ததில் பெண் ஒருவர் காமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வவுனியா – கல்மடுவ பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு காயம்மடைந்துள்ளார்.

குறித்த பெண் தமது வீட்டின் பின்புறமுள்ள காட்டுப் பகுதியில் விறகு சேகரித்துக் கொண்டிருந்த போது விலங்குகளை வேட்டையாடுவதற்காக பயன்படும் கட்டுத்துவக்கு வெடித்துள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஈச்சங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.