;
Athirady Tamil News

“கோட்டா கோ கம”வில் சலசலப்பு: வெள்ளிவரை காலக்கெடு !!

0

காலிமுகத்திடலில் இருக்கும் எஸ்.டப்ளியு.ஆர்.டி பண்டாரநாயக்கவின் சிலை அருகாமையில் இருக்கும் “கோட்டா கோ கம”வுக்கு பொலிஸார் காலக்கெடு விதித்துள்ளனர்.

அதனடிப்படையில், அங்கு நிறுவப்பட்டிருக்கும் கூடாரங்கள் ஓகஸ்ட் 5 வௌ்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு முன்னர் அகற்றவேண்டுமென பொலிஸார், ஒலிப்பெருக்கி ஊடாக அறிவித்துள்ளனர்.

“சட்டவிரோத கட்டமைப்புகளை” அகற்ற மீதமுள்ள எதிர்ப்பாளர்களிடம் ​பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இந்த அறிவிப்பினால் அங்கு ஒருவகையான சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.