;
Athirady Tamil News

கல்முனை IOC யில் அரசாங்க அறிவுறுத்தலுக்கு அமைய QR Code முறை மூலம் எரிபொருள் விநியோகம்!! (படங்கள், வீடியோ)

0

கல்முனை IOC எரிபொருள் நிலையத்தில் அரசாங்கத்தால் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களுக்கு அமைய QR Code திட்டத்தின் ஊடாக வாகனங்களுக்கு இன்று எரிபொருள் விநியோகிக்கப்பட்டன.

கல்முனை திலகா எரிபொருள் நிலைய முகாமைத்துவ பணிப்பாளர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலுக்கு அமைய QR Code முறை மூலம் முதல் தடவையாக பொதுமக்களுக்கு எரிபொருள் வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டது.

இதேவேளை வாகனங்களின் இறுதி இலக்கங்களுக்கு அமைய கடந்த தினங்களாக எரிபொருளை பெற்றுக் கொள்ளாத பொதுமக்களுக்கும் இன்றைய தினம் எரிபொருள் வழங்கப்பட்டன. இதன் போது மோட்டார் சைக்கிள்களுக்கு 4 லீட்டரும் முச்சக்கர வண்டிகளுக்கு 5 லீட்டரும் சொகுசு கார் வாகனங்களுக்கு 20 லீட்டரும் எரிபொருள் வழங்கப்பட்டது.

அத்துடன் கரப்பிணிகள், மத தலைவர்கள், பொலிஸார், பொது சுகாதார பரிசோதகர்கள் ,நோய் பிணியாளர்களுக்கும் இடையிடையே முன்னுரிமை வழங்கப்பட்டு எரிபொருள் பெற்றுக்கொடுக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

எனினும் இன்னும் பல எரிபொருள் நிரப்பு நிலையங்களில் அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்கள் சரியாக பின்பற்றப் படாமையால் பொதுமக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டு வருவதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர்.
“அதிரடி” இணையத்துக்காக மட்டக்கிளப்பில் இருந்து “மட்டுநகரான்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.