;
Athirady Tamil News

2-வது மாடியில் இருந்து தவறி விழுந்து என்ஜினீயர் சாவு..!!

0

பெங்களூரு ஹெண்ணூர் எச்.பி.ஆர். லே-அவுட் 5-வது பிளாக்கில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 2-வது மாடியில் வசித்து வந்தவர் விஸ்வாஸ்குமார் (வயது 33). இவர் தனியார் நிறுவனத்தில் என்ஜினீயராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் சுதந்திர தினத்தையொட்டி தான் வசித்து வரும் வீட்டின் முன்பு விஸ்வாஸ்குமார் தேசிய கொடி கட்டி கொண்டு இருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மாடியில் இருந்து தவறி விழுந்த விஸ்வாஸ்குமார் படுகாயம் அடைந்து பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து ஹெண்ணூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.