;
Athirady Tamil News

பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்த பேருந்து… 6 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு..!!

0

ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் மாவட்டம், சந்தன்வாரி அருகே இந்தோ-திபெத் எல்லைப் பாதுகாப்பு படையினர் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானது. அமர்நாத் யாத்திரை பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட வீரர்கள் சந்தன்வாரி பாகல்காமில் இருந்து திரும்பியபோது, அவர்களின் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்தது. இதில் பேருந்து கடுமையாக சேதமடைந்தது. பேருந்தில் பயணித்த 6 வீரர்கள் உயிரிழந்தனர். 35 வீரர்கள் காயமடைந்தனர். காயமடைந்த வீரர்கள் ஹெலிகாப்டர் மூலம் ஸ்ரீநகர் ராணுவ மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.