;
Athirady Tamil News

ராணி எலிசபெத் கடந்து வந்த பாதை..!!

0

இங்கிலாந்து மகாராணியான ராணி எலிசெபத் நேற்றிரவு காலமானார். அவரது மறைவுக்கு உலக தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் ராணி எலிசபெத் கடந்து வந்த பாதை குறித்து பார்ப்போம்:-

* 1926-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21-ந்தேதி லண்டனில் உள்ள மேபேரில் ஆறாம் ஜார்ஜ்-எலிசபெத் தம்பதிக்கு ராணி எலிசபெத் பிறந்தார். இவரது முழு பெயர் எலிசபெத் அலெக்சான்ட்ரா மேரி ஆகும்.

* 1936-ம் ஆண்டு டிசம்பர் மாதம் இங்கிலாந்தில் நெருக்கடி நிலை ஏற்பட்ட போது ராணி எலிசபெத் தந்தை ஆறாம் ஜார்ஜ் மன்னரானார்.

* 1947-ம் ஆண்டு இந்தியாவில் இங்கிலாந்து ஆட்சி முடிவுக்கு வந்ததும் நவம்பர் மாதம் 20-ந்தேதி ராணி எலிசபெத் பிலிப் மவுண்ட் பேட்டனை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு சார்லஸ், ஆண்ட்ரூ, எட்வர்டு ஆகிய மகன்களும் ஆன் என்ற மகளும் உள்ளனர்.

* 1952-ம் ஆண்டு தந்தை ஜார்ஜ் மரணம் அடைந்தார், இதையடுத்து பிப்ரவரி 6-ந்தேதி ராணி எலிசபெத் இங்கிலாந்து ராணியாக முடிசூட்டப்பட்டார். அப்போது அவருக்கு 25 வயதுதான் ஆனது. இந்த விழா உலக அளவில் டி.வி.யில், ஒளிபரப்பப்பட்ட முதல் பிரமாண்ட நிகழ்ச்சி என்ற பெருமையை பெற்றது.

* 1977-ம் ஆண்டு ராணி எலிசபெத் பதவி ஏற்று 25 ஆண்டுகள் ஆனதையொட்டி வெள்ளி விழா கொண்டாடப்பட்டது.

* 1979-ம் ஆண்டு ஜூலை மாதம் 29-ந்தேதி ராணியின் மகன் சார்லசுக்கும், டயானாவுக்கும் இடையே திருமணம் நடந்தது. இந்த திருமணத்தை உலக அளவில் 700 மில்லியன் பொதுமக்கள் டி.வி. மூலம் பார்த்து ரசித்தனர்.

* 2005-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ராணியின் மகன் சார்லஸ் 2-வதாக கமீலா பர்கரை திருமணம் செய்து கொண்டார்.

* 2011-ம் ஆண்டு பேரன் இளவரசர் வில்லியம், கேத்ரின் மிடிலேட்டனை திருமணம் செய்து கொண்டார்.

* 2012-ம் ஆண்டு ராணி தான் பதவி ஏற்ற 50-வது வைர விழாவை கொண்டாடினார்.

* 2015-ம் ஆண்டு ராணி எலிசபெத் இங்கிலாந்தில் அதிக வருடம் மகாராணியாக இருந்த பெருமையை பெற்று சாதனை படைத்தார்.

* 2018-ம் ஆண்டு பேரன் ஹாரி மேகன் மார்கலேவை திருமணம் செய்து கொண்டார்.

* கடந்த ஆண்டு ( 2021) ஏப்ரல் 9-ந்தேதி ராணியின் கணவர் பிலிப் தனது 99 வயதில் மரணம் அடைந்தார். இவர் 73 ஆண்டுகள் ராணியுடன் திருமண வாழ்க்கை வாழ்ந்தார்.

* இந்த ஆண்டு (2022) பிப்ரவரி 6-ந்தேதி ராணி அரியணைக்கு வந்து 70 ஆண்டுகள் நிறைவடைந்தையொட்டி ஜூன் மாதம் முழுவதும் பல்வேறு பவள விழா நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

* 2022-ம் ஆண்டு (நேற்று) செப்டம்பர் மாதம் 8-ந்தேதி ராணி எலிசபெத் மரணம் அடைந்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.