;
Athirady Tamil News

இந்தியாவில் கொரோனா புதிய பாதிப்பு 6,422 ஆக உயர்வு..!!

0

கொரோனா பாதிப்பு நிலவரம் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 6,422 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக கூறியுள்ளது. நேற்று முன்தினம் பாதிப்பு 4,369 ஆக இருந்தது. நேற்று 5,108 ஆக உயர்ந்த நிலையில் இன்று 2-வது நாளாக பாதிப்பு அதிகரித்துள்ளது. மொத்த பாதிப்பு 4 கோடியே 45 லட்சத்து 13 ஆயிரத்து 892 ஆக உயர்ந்தது. தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 5,748 பேர் மீண்டுள்ளனர். இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 4 கோடியே 39 லட்சத்து 41 ஆயிரத்து 840 ஆக உயர்ந்தது. தற்போது 46,389 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொற்று பாதிப்பால் கேரளாவில் விடுபட்ட 20 மரணங்கள் உள்பட மேலும் 34 பேர் இறந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 5,28,250 ஆக உயர்ந்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.