;
Athirady Tamil News

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த முதியவருக்கு சிறை- போக்சோ கோர்ட்டு தீர்ப்பு..!!

0

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் மன்னார்காடு பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுமி கடந்த ஆண்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இது தொடர்பாக சிறுமியின் உறவினரான 55 வயது முதியவர் கைது செய்யப்பட்டார். அவர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டு, பட்டாம்பி விரைவு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட்டது.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முதியவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.1½ லட்சம் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். அபராத தொகையை பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு வழங்கவும் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.