;
Athirady Tamil News

சேலையில் கால்பந்து ஆடிய மேற்கு வங்காள பெண் எம்.பி…!!

0

மேற்கு வங்காள மாநிலம் கிருஷ்ணாநகர் மக்களவை தொகுதியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பெண் எம்.பி. மகுவா மொய்த்ரா. தங்கள் கட்சியின் தேசிய செய்தித்தொடர்பாளராக முன்பு இருந்துள்ள மகுவா மொய்த்ரா, அவ்வப்போது அதிரடி கருத்துகளை வெளியிட்டு பரபரப்பை கிளப்புவார். இந்த நிலையில் தனது தொகுதியில் நடந்த கிருஷ்ணாநகர் எம்.பி. கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப்போட்டிக்கு மகுவா மொய்த்ரா சென்றார். அப்போது அவர் திடீரென சேலையுடன் களமிறங்கி கால்பந்து விளையாடி கலக்கினார்.

அவர் லாவகமாக பந்தை தட்டிச்சென்றது கால்பந்து ரசிகர்களை கவர்ந்தது. மகுவா மொய்த்ரா சிறிதுநேரம் ‘கோல் கீப்பிங்’கும் செய்தார். தான் கால்பந்து விளையாடும் படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்துகொண்டுள்ள எம்.பி. மகுவா மொய்த்ரா, ‘கிருஷ்ணாநகர் எம்.பி. கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் சுவாரசியமான தருணங்கள். ஆம், நான் சேலையில் கால்பந்து ஆடினேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

சிவப்பு-ஆரஞ்சு வண்ண சேலையுடன், கண்களில் ‘கூலிங்கிளாஸ்’, கால்களில் ஷூக்கள் அணிந்து எம்.பி. மகுவா மொய்த்ரா கால்பந்து விளையாடும் காட்சி சமூக வலைதளத்தில் வைரல் ஆகியுள்ளது. அவரை பாராட்டியும், ஆதரவாகவும் பலரும் கருத்து பதிவிட்டுள்ளனர் ‘அச்சமற்ற இந்தியப் பெண்… இவரால் எதையும் செய்ய முடியும்’ என்று சிலர் குறிப்பிட்டுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.