;
Athirady Tamil News

கேரளாவில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு..!!

0

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நேற்று 5,443 ஆக இருந்தது. இந்நிலையில் இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 5,383 பேருக்கு தொற்று உறுதியாகி இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

இதில் அதிகபட்சமாக கேரளாவில் மட்டும் 2,300 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு ஓணம் பண்டிகை கொண்டாட்டத்திற்கு பிறகு பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நாட்டில் இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 45 லட்சத்து 55 ஆயிரத்து 837 ஆக உயர்ந்துள்ளது. நேற்று கொரோனா பாதிப்பில் இருந்து 6,424 பேர் மீண்டு வீடு திரும்பினர்.

இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 39 லட்சத்து 84 ஆயிரத்து 695 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 45,281 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது நேற்றை விட 1,061 குறைவாகும். கொரோனா பாதிப்பால் கேரளாவில் விடுபட்ட 8 மரணங்கள் உள்பட நாடு முழுவதும் மேலும் 20 பேர் இறந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 5,28,449 ஆக அதிகரித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.