;
Athirady Tamil News

சிறுமிகள் தொடர்பான ஆபாச படம் வழக்கு- 20 மாநிலங்களில் 56 இடங்களில் சி.பி.ஐ. அதிரடி சோதனை..!!

0

சிறுமிகள் தொடர்பான ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்தது, பகிர்ந்தது தொடர்பாக சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. சிங்கப்பூரில் உள்ள இன்டர்போல் அளித்த தகவலின்படி, சி.பி.ஐ. இது குறித்து 2 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளது. இந்த நிலையில் சிறுமிகள் தொடர்பான ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்தது, பகிர்ந்தது தொடர்பான வழக்கில் சி.பி.ஐ. நாடு முழுவதும் இன்று 56 இடங்களில் அதிரடி சோதனை நடத்தியது. 19 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் ஒரே நேரத்தில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.