;
Athirady Tamil News

போஷாக்கு பிரச்சினையை கண்டறிய கணக்கெடுப்பு !!

0

நாட்டில் உள்ள போஷாக்கு பிரச்சினைகளை கண்டறியும் நோக்கில் நாடளாவிய ரீதியில் கணக்கெடுப்பை ஆரம்பிப்பதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

நாட்டின் பல பகுதிகளில் பதிவாகும் போஷாக்கு குறைபாடு தொடர்பான சம்பவங்களை கருத்திற்கொண்டு இந்த தீர்மானத்துக்கு வந்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

இது தொடர்பில் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு சுகாதார அமைச்சின் அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

தரவுகள் மற்றும் கணக்கெடுப்பின் முடிவுகளின் அடிப்படையில் மேலதிக நடவடிக்கைகள் விரைவில் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, விசேட வைத்திய நிபுணர்களின் ஓய்வு பெறும் வயதெல்லையை 63 ஆக நீடிப்பது தொடர்பான யோசனையை அமைச்சரவையில் சமர்ப்பிக்கவுள்ளதாக அமைச்சர் ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

இந்த தீர்மானத்தினால், ஏற்கெனவே திட்டமிடப்பட்ட சத்திரசிகிச்சைகள் உள்ளிட்ட விடயங்களுக்கு தடை ஏற்பட்டுள்ளதாக விசேட வைத்திய நிபுணர்களுடனான சந்திப்பின்போது தனக்கு தெரியப்படுத்தப்பட்டதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.