;
Athirady Tamil News

கரிப்பட்டமுறிப்பு மக்களுக்காக சத்ய சாயி குடிநீர் திட்டம்!! (PHOTOS)

0

முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் பகுதியிலுள்ள கரிப்பட்டமுறிப்பு மக்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட சத்ய சாயி குடிநீர் திட்டம் நேற்றைய தினம்(01) மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டது.

இலங்கை சத்திய சாயி சர்வதேச நிறுவனத்தின் வேலை திட்டத்தில் Vision of Love (UK) அனுசரணையுடன் 23ம் விஜயபாகு காலாட்படை பிரிவின் உழைப்பில் இந்த குடிநீர் திட்டம் மேற்கொள்ளப்பட்டது.

இதன் மூலம் நாள் ஒன்றுக்கு ஆயிரம் பேர் பயனடைவர் என எதிர்பார்க்கப்படுவதுடன் ஏ – 34 பாதையின் ஊடாக பயணிக்கின்ற பயணிகளும் பயனடைவர்.

இந்நிகழ்வில் இலங்கை சத்திய சாயி சர்வதேச நிறுவனத்தின், தலைவர் V.மனோகரன், தேசிய சேவைகள் இணைப்பாளர் குலேந்திரன் சிவராம், வடமத்திய பிராந்திய தலைவர் சாய் சகோதரர் தவீசன், முல்லைத்தீவு மாவட்ட இராணுவ அதிகாரிகள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.